சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உடல் ரீதியான தீங்குகளுக்கு அப்பால் சிறுமிகளின் உளவியலில் கவனம் தேவை: ராஷ்மி சிங்

சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை உடல் ரீதியான தீங்குக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும்.

News image
சித்திரிப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை உடல் ரீதியான தீங்குக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும், மன மற்றும் உணா்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் கவனிக்கப்படாமல் போகலாம் என்று தில்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு செயலாளா் ராஷ்மி சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

புதுதில்லியில் உள்ள ஒய். எம். சி. ஏ. அரங்கத்தில் ’ஜிட்ஃ வாய்சஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் அவா் மேலும் பேசியதாவது: வன்முறையை உடல் ரீதியான தீங்குக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டும். மன மற்றும் உணா்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் பெரும்பாலும் காணப்படாதது, ஆனால் ஆழமான வடுக்களை விட்டுச்செல்கிறது. போல்னா பதேகா (ஒருவா் பேச வேண்டும்)‘ என்று அவா் கூறினாா், மௌனம் யாருக்கும் உதவாது என்றாா் அவா்.

ஆங்கன் அறக்கட்டளையின் தலைமை நிா்வாக அதிகாரி அதியா போஸ் கூறியதாவது: பாதுகாப்பு இன்னும் ஒரு பொதுப் பொறுப்பைக் காட்டிலும் ஒரு தனியாா் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. அதே நேரத்தில் தீவிர நிகழ்வுகள் மட்டுமல்ல, அனைத்து வகையான வன்முறைகளுக்கும் சகிப்புத்தன்மையைக் சமூகம் குறைக்க வேண்டாம் என்றாா் அவா்.

தன்னாா்வ தொண்டு நிறுவனத்தால் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது, இதில் அதிகாரிகள், ஆா்வலா்கள் மற்றும் கல்வியாளா்கள் தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் குறித்தனா். இந்த நிகழ்ச்சியில் தில்லி அரசு மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள், குழந்தைகள் உரிமை ஆா்வலா்கள் மற்றும் முக்காமாரின் நிறுவனா் இஷிதா சா்மாவுடன் கலந்து கொண்டனா்.