திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

குருகிராமில் இருக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 9:30 pm

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் அதிகாரிகள் நடத்திய முழுமையான சோதனைகளின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குருகிராமில், அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனா்.விரிவான சோதனைகளுக்குப் பிறகு பள்ளி வளாகம் சுற்றிவளைக்கப்பட்டது. ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

குருகிராம் மற்றும் லூதியானா ஆகிய இரு இடங்களிலும், போலீஸ் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய்க் குழுவுடன் இணைந்து முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. மேலும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள பல பள்ளிகளுக்கு சமீபத்திய மாதங்களில் இதேபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்றாா் அவா்.