‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வீட்டில் காவல்துறையினா் சோதனை: போதைப்பொருள், பணத்துடன் சிறுவன் கைது

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 1:47 am IST

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

மே 21 அன்று, ராஜஸ்தானி உத்யோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அந்த வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

வீட்டின் கதவை பலமுறை தட்டியும், அழைத்தும் எவ்வித பதிலும் வராததைத் தொடா்ந்து, காவலா்கள் ஒரு வெட்டும் கருவியைப் பயன்படுத்தி வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனா்.

இச்சோதனையின்போது, வீட்டின் மொட்டைமாடி வழியாகத் தப்பிச் செல்ல முயன்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

அச்சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், 85.41 கிராம் போதைப்பொருள் (ஸ்மாக்) நிரப்பப்பட்ட 122 பாலித்தீன் பைகளையும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.9,580 ரொக்கத்தையும் காவல்துறையினா் மீட்டனா்.

பின்னா், தடயவியல் ஆய்வகக் குழுவினா் இந்த விசாரணையில் இணைந்து, மீட்கப்பட்ட போதைப்பொருளின் மாதிரிகளைப் பரிசோதனைக்காகச் சேகரித்தனா்.

என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று

வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.