முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விவசாய விமோசனம்

விவசாய விமோசனம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.60; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.

News image
Updated On :25 டிசம்பர் 2016, 6:13 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

விவசாய விமோசனம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.60; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.
2013 - 2015 காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி ஆகியவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
செயற்கை உரத்துக்குப் பதிலாக இயற்கை உரங்களைத் தயாரிப்பது எப்படி? தேசிய நீர்வழிச் சாலை அமைக்கப்பட்டால், போக்குவரத்து மட்டுமல்ல, விவசாயமும் மேம்படும்; மக்களுக்குக் குடிநீர் கிடைக்கும், நிலத்தடி நீர் உயரும் என்பன போன்ற கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.
பாலில் தண்ணீரைக் கலந்துவிட்டு, அதை அடர்த்தியாகக் காண்பிக்க, அதில் ஸ்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா,சர்க்கரை, குளுகோஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். அந்தக் கலப்படப் பால் கெடாமல் இருக்க சோடியம் ஹைட்ராக்ûஸடு போன்ற ரசாயனப் பொருள்களையும் சேர்க்கிறார்கள். எனவே வெளுத்ததெல்லாம் பால் என்று வாங்கக் கூடாது என்கிறார் நூலாசிரியர்.
"பி.ட்டி கக்தரிக்காயைப் பரிசோதித்தால் விஷம் தெரியாது. ஆனால் பொரியலாகவோ, கூட்டாகவோ செய்தால் விஷம் வெளிப்படும்.
பேயர்ஸ், டூபாண்ட், மான்சென்டோ, டொவ் கார்கில் மெர்க் என்ற வரிசையில் விட்டுப்போன பன்னாட்டு எமதர்ம நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் பெட்ரோலியப் பொருள்கள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள், மனித மருந்துகள், நவீன பாக்கெட் உணவுகள், பி.ட்டி விதைகள் போன்றவை.
விஷத்தைப் பரப்புவர்களும் அவர்களே. விஷத்தால் நோயுற்ற மனிதர்களுக்குப் புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து அளிப்பவர்களும் அவர்களே. இவர்களிடம் இருந்து மீள ஒரே வழி இயற்கை விவசாயமே' என்கிறார் நூலாசிரியர்.
இந்நாட்டின் விவசாயத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் மேம்படுத்த இந்நூல் விதைக்கும் சிந்தனைகள் உதவும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.