அமுதக்கனி
மனதின் அடித்தளத்தில் ஒரு கதை தங்கி இருந்தால், அது தானாகவே வெளிவரும். அது பூர்வ ஜன்மத்தை ஆராய்ந்து தெளிவதாகக் கூட இருக்கலாம். அதுபோன்ற அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறான் கதை நாயகன் அமர்நாத்.


அமுதக்கனி - மனோஜ்தாஸ்; தமிழில் : இளம்
பாரதி; பக்.288; ரூ.260; சாகித்ய அகாதெமி, சென்னை-18 )044 -2431 1741.
"சரஸ்வதி சம்மான்' பரிசு பெற்ற ஒடியா மொழி நாவல். காவிய காலத்து நிகழ்வுகளையும், நடைமுறை காலத்து நிகழ்வுகளையும் ஒன்றிணைக்கும் யுக்தியில் உருவான படைப்பு.
மனதின் அடித்தளத்தில் ஒரு கதை தங்கி இருந்தால், அது தானாகவே வெளிவரும். அது பூர்வ ஜன்மத்தை ஆராய்ந்து தெளிவதாகக் கூட இருக்கலாம். அதுபோன்ற அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறான் கதை நாயகன் அமர்நாத்.
கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜயினியின் ராஜா பர்த்ருஹரி, அவனது இளையராணி சிந்துமதி, அமைச்சர் ஜயகாந்த் ஆகியோரும் நாவலில் பாத்திரங்களாக உலா வந்து கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
அமர வாழ்வு தரும் கனி எப்படித் தடம் மாறி மாறி கதை மாந்தரிடையே பரஸ்பரம் கைமாறுகிறது என்பது சுவாரசியம். நிகழ்காலத்தில் போதை மருந்து எப்படி இடம் மாறுகிறது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. சிந்துமதியின் உயிரைக் காக்க பர்த்ருஹரி அமுதக் கனியை கொண்டு வருவதற்குள் அவள் இறந்துவிடுகிறாள். போதை மருந்துக்கு அடிமையான அமர்நாத்தின் மகள் சாவிலிருந்து மீண்டு உணர்வு திரும்புகிறாள்.
இது வரலாற்று நாவல் அல்ல. உணர்வு சார்ந்த படைப்பு. கடந்த காலம், நிகழ்காலம் என ஒருசேர சேர்ந்த இந்த புதினத்தில் கதை மாந்தர்களின் பேச்சு
முறையும் கால வேறுபாட்டுக்குத் தக்கவாறு அமைந்திருப்பது சிறப்பு. தற்கால பரபரப்பான நகர வாழ்வுச் சூழலையும் ராஜா பர்த்ருஹரி காலத்து அரசியல் சூழ்நிலையையும் இணைத்து வடிவமைத்துள்ளார் கதாசிரியர்.
ஆழ்ந்த வாசிப்பு தேவைப்படும் நாவலை, தொய்வு ஏற்படாத வகையில் மொழிபெயர்த்திருக்கிறார் இளம் பாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...