தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

DIN

பெரிய வாய்க்கா தெரு (சிறுகதைகள்) - பாரதி வசந்தன்; பக். 336; ரூ.350; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 9940446650.

புதுச்சேரி மண்ணின் மைந்தரான நூலாசிரியர், தன் மண் சார்ந்த மக்களின் உணர்வுகள், பிரச்னைகளை மையப்படுத்தி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். ஏற்கெனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகள்தான் என்றாலும், அனைத்தையும் ஒரே மூச்சில் படிக்கும்போது நூலாசிரியரின் பன்முகப் பார்வையும், ஒவ்வொரு கதைக் கருவுக்கும் உள்ள வித்தியாசங்களும், சொல்லாடலும் வியப்பை ஏற்படுத்துகின்றன. 

பெரிய வாய்க்கா தெரு, வீடுபேறு, ரோபோ மரங்கள், மோரிசான் தோட்டம், முடத்தெங்கு, அவரவர் பாடு, அலிபாபாவும் 30 திருடர்களும் உள்ளிட்ட 25 சிறுகதைகளும் மனதைக் கவர்கின்றன. 

'வீடுபேறு' கதையின் நாயகி, கம்பன் நகர் என்ற அழகிய பகுதியில் குடியேற ஆசைப்படுகிறாள். ஆனால், இறுதியில் பூமியான்பேட்டை என்ற அவளுக்குப் பிடிக்காத பகுதியில் குடியேற சம்மதம் தெரிவிக்கிறாள். இந்த மாற்றத்துக்கு அவளது பெற்றோர் காரணம் என்பது கதையில் ஒரு திருப்பம். 'பெரிய வாய்க்கா தெரு' கதையின் முடிவற்ற முடிவு மனதைக் கனக்க வைக்கிறது. 'ரோபோ மரங்கள்' கதை அறிவியலையும், வாழ்வியலையும் பேசுகிறது.

பக்கத்தில் இருக்கும் புதுச்சேரியில் நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளதை இக்கதைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. படித்து முடிக்கையில் புதுச்சேரியில் சில காலம் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு மனதில் தங்குகிறது. அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.