பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்
ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி  கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி  கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.

பகல்பத்து 4 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் செளரி  கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம் , முத்துச்சரம், பவள மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

காலை 8 மணி முதல் பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றன. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com