அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வி.ஐ.பி. களுக்கு அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய முடிவு

ஆந்திர மாநில கோயில்களுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு கோயில் சார்பில் அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:21 pm

DIN

ஆந்திர மாநில கோயில்களுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு கோயில் சார்பில் அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு திருமலை உள்பட அதிக அளவில் நன்கொடை அளித்த ஜமீன்தாரர்கள், செல்வந்தர்கள், மன்னர்கள் உள்ளிட்டோருக்கும் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருக்கும், வி.வி.ஐ.பி.களுக்கும் கோயிலுக்கு செல்லும் முன் கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை அளித்து வருகிறது. 
தற்போது ஜமீன்தார்கள், மன்னர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட வர்க பாரம்பரியம் மறைந்து விட்ட நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் தவிர்த்து மற்ற வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிகளுக்கு அளிக்கப்படும் பூரணகும்ப மரியாதையை ரத்து செய்ய ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.