மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பித்ருசாபம் நீக்கும் வயலூர் சிவன்கோயில்

திருமலைராஜபுரம் சாலையில் அமைந்துள்ளது வயலூர் சிவன் கோயில். பேருந்து

News image
Updated On :14 ஜூன் 2018, 6:48 am

கடம்பூர் விஜயன்

திருமலைராஜபுரம் சாலையில் அமைந்துள்ளது வயலூர் சிவன் கோயில். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரை கி.மீட்டம் தூரம் ஊருக்குள் செல்லவேண்டும். 

திருவிடைமருதூர் கோயில் மூலலிங்க கருவறையாகவும் நவக்கிரகங்களில் கோனேரி ராஜபுரம் சூரியனாகவும், அன்னியூர்- புதனாகவும், நாகம்பாடி- சுக்கிரனாகவும், எஸ்.புத்தூர்- குருவாகவும், வைகல்- கேது, வயலூர்- ராகு, சிவனாகரம்,-சனி, கருவிலி-செவ்வாய்க்கும் உரிய தலமாக இருக்கிறது.

Story image

முன்னொரு காலத்தில் பூலோகமே காடுகளாக இருந்த போது நாகலோக நாகங்கள் பூமிக்கும் வந்து வாழ்ந்துவந்தன, அப்போது கார்கோடகன் எனும் நாகன் பூமியில் வசிக்கும் தவசீலர்களை துன்புறுத்தி வந்தான், ஒரு முறை கர்கி முனிவரிடம் ஏற்பட்ட பிரச்னையில், அவர் கார்கோடகனை கண் தெரியாமல் போக என சபிக்கிறார்.

Story image

கண்தெரியாமல் பூமியில் உழலும் கார்கோடகன் முனிவரிடம் சாப நிவர்த்தி கேட்கிறான். முனிவரும் மனமிறங்கி உன் அருகாமையில் உள்ள குளத்தில் நீராடி, வில்வமரத்தின் இலைகளை பறித்து சிவனை நோக்கி தவம் செய்வாயாக. சிவன் உனக்கு அருள் தருவார் என கூறுகிறார். கார்கோடகனும் அவ்வாறே செய்ய சிவன் காட்சி கொடுக்கிறார். 

இருப்பினும் முனிவர் கொடுத்த சாபத்தை நீக்க இயலாது. உனக்கு கண் தெரியும்போது காது கேட்காது, காது கேட்கும்போது கண் தெரியாது என கூறுகிறார். தேவைக்கு ஏற்ப நீ உபயோகப்படுத்தி வாழ்வாயாக என அருள் தருகிறார். இன்று முதல் உனக்கு சக்ஷுச்வரஸ் என பெயர் பெறுவாய் என கூறினார். 

Story image

அதனால் இக்கோயிலின் எதிரில் உள்ள குளம் கார்கோடக தீர்த்தம் எனவும், பித்ருசாபம், குருசாபம், சர்ப்பசாபம் ஆகியவை நீங்க இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெறலாம். ராகு தோஷ நிவர்த்திக்கும் ஏற்ற தலம் இதுவாகும். கருவறை புற சுவற்றில் கார்கோடகன் இறைவனை வணங்கும் சிற்பம் உள்ளது. இக்கோயிலில் உச்சிகால பூஜையில் சுக்கும் நாட்டுசர்க்கரையும் கலந்து இடித்த நிவேதனம் தருகின்றனர். 

இறைவனின் அருகில் இறைவி தெற்கு நோக்கி உள்ளார். பிரகாரத்தில் விநாயகரின் சிற்றாலயமும், வடபுறத்தில் மேற்கு நோக்கிய சிவலிங்கமும் உள்ளன. 

இறைவன் - கார்கோடகேஸ்வரர் 

இறைவி - மங்களாம்பிகை


- கடம்பூர் விஜயன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.