சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும் இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ம் தேதி திறக்கப்படுகிறது. தந்திரி மனுநம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15-ம் முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும்.