கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீஐயப்பசுவாமி ஆலயம் உள்ளது, இங்குள்ள ஸ்ரீகன்னிமூல கணபதிக்கு தைமாத சங்கடஹரசதுர்த்தி சிறப்புபூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட கன்னிமூலகணபதிக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆண், பெண் பக்தர்கள் கணபதியை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கணேஷ் திருமேனி செய்தார்.