மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்)

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) -குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.472; ரூ.750; அன்னம், தஞ்சாவூர்-7 ; 04362- 239289.

News image
Updated On :20 ஜனவரி 2020, 5:07 am IST

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.472; ரூ.750; அன்னம், தஞ்சாவூர்-7 ; 04362- 239289.
இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 - 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
முதலாம் ராஜேந்திரன் கி.பி.1012 இல் இளவரசனாகப் பொறுப்பேற்றிருக்கிறான். வடக்கே வங்காளதேசம் முதல் தெற்கே குடமலை நாடு வரை படையெடுத்துக் கைப்பற்றியிருக்கிறான். கடாரம் வென்ற சோழமன்னனும் இவனே. கடல் வழியாகச் சென்று லட்சத் தீவு, மாலத்தீவு ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கிறான். இராஜேந்திர சோழன் வென்ற பகுதிகளைப் பற்றியும் அதற்கான ஆதாரங்களைப் பற்றியும் மிக விரிவாக இந்நூல் கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், கங்கை கொண்ட சோழீச்சரம் உள்ளிட்ட பல கோயில்களை எழுப்பியிருக்கின்றான். ஏற்கெனவே உள்ள கோயில்களை புதுப்பித்திருக்கிறான். உதாரணமாக திருவொற்றியூர் ஆதி புரீஸ்வரர் திருக்கோயிலில் கருவறை அமைத்ததை, திருவாரூர் வீதிவிடங்கர் திருக்கோயில் செங்கல் கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றியதைக் கூறலாம்.
இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வரி வசூலிப்பு, அதை பயன்படுத்திய முறை ஆகியவை பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கி.பி.1024-25-இல் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கியது, அதற்கான காரணங்கள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அமைப்பு ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் வரலாற்றை பல துல்லியமான சான்றாதாரங்களுடன் விளக்கும் அரிய முயற்சி இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.