ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: ஆடவர் டெஸ்டில் முதல்முறையாக பெண் நடுவர்!

ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்...

News image
Updated On :7 ஜனவரி 2021, 5:32 pm IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் 4-வது நடுவராகப் பணியாற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக், ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.  

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் சிட்னி டெஸ்டில் 4-வது நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக் பணியாற்றுகிறார். இதன்மூலம் ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். கிளேர் போலோசாக் ஏற்கெனவே, ஆடவருக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர்.

டெஸ்ட்டுக்கான ஐசிசி விதிகளின் படி, போட்டியை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் 4-வது நடுவர் நியமிக்கப்படுகிறார். அவர் ஐசிசி நடுவர்களுக்கான சர்வதேச குழுவில் அங்கம் வகிப்பவராக இருப்பார். 

ஆடுகளத்தில் இரு நடுவர் பணியாற்றுவார்கள். மூன்றாவது நடுவர், டிஆர்எஸ் முறையீடுகள், ரன் அவுட், ஸ்டம்பிங் முறையீடுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வார். ஆட்டத்துக்கான புதிய பந்தை வழங்குவது, புதிய பெய்ல்ஸ்களை அளிப்பது, கள நடுவர்களுக்கான இளைப்பாறல் பானங்களை எடுத்து வருவது, லைட் மீட்டர்களின் பேட்டரிகளை சரிபார்ப்பது, மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளின்போது ஆடுகளத்தை சரிபார்ப்பது போன்றவை 4-ஆவது நடுவரின் பணியாகும். எதிர்பாராத சூழ்நிலைகளில் கள நடுவரின் பொறுப்புக்கு தொலைக்காட்சி நடுவர் செல்லும் பட்சத்தில், அவரது பொறுப்பை 4-ஆவது நடுவர் ஏற்பார்.

ஆடவர் டெஸ்டில் நடுவராகப் பணியாற்றி வரும் கிளார் போலோசாக்குக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.