திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சர்வதேச கால்ந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவில் நீதிபதி முகுல் முத்கல்

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 மே 2016, 1:05 pm

புது தில்லி: சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி முகுல் முத்கல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தடை செய்தார்.

மேலும், தில்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் கண்காணிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நியமனம் குறித்த நேரடியான கடிதம் ஏதும் தனக்கு இதுவரை வரவில்லை. எனினும், சம்மேளனத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அந்த பணியை ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.