விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினாபென் 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

News image

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாபென் படேல்.

Updated On :29 ஆகஸ்ட் 2021, 4:45 am

DIN


டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல்  வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா். பாராலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையை பெற்ற்றார்.

இதன் முலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவினாபென், அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் மியாவ் ஜாங்கை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட்களில் 34 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இதுவரை மியாவை 11 முறை சந்தித்துள்ள பவினாபென்னுக்கு, இது முதல் வெற்றியாகும்.

பவினாபென் அடுத்தபடியாக, இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலையில் இருக்கும் மற்றொரு சீன வீராங்கனையான யிங் ஸௌவை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்டார். மூன்றாவது போட்டியில் 11-6 என்ற கேம் கணக்கில் யிங் ஸௌ வென்றார். அத்துடன் யிங் ஸௌ 11-7,11-5,11-6 என்ற கேம் கணக்கில் போட்டியை வென்றார். யிங் ஸௌவிடம் கடும் சவாலை எதிா்கொண்ட இந்தியாவின் பவினாபென்,  3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். 

இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார் பவினா. 

தேசிய விளையாட்டு தினமான இன்று டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் பவினா. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, டோக்கியோ பாராலிம்பிக் போட்டி என இரண்டிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வீராங்கனைகளே வென்று அசத்தியுள்ளனர் என்பது மேலும் சிறப்பு. 

வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பவினாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.