தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. 

News image
ரோகித் சர்மா
Updated On :12 ஜூலை 2022, 5:08 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பும்ரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை எடுத்தார்.இதனால்  110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. 

இதனைத்தொடர்ந்து 111 ரன்கள் என்ற இலக்குடன் கலமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவரில் 114 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷிகர் தவான் 54 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தார். இருவரும் விக்கெட் இழக்காமல் 114 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தனர். 

6 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.