150 ஆண்டுகளை நெருங்கும் டெஸ்ட் கிரிக்கெட்; போட்டியுடன் கொண்டாட ஆஸி. கிரிக்கெட் வாரியம் முடிவு!
டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் முதன் முதலாக 1877 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கப்பட்டு வருகிற 2027 ஆம் ஆண்டுடோடு 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை கொண்டாடும் விதமாக வருகிற 2027 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் எம்சிஜி கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 முதல் 2030-31 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

