ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

யு-19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா!

யு-19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா..

News image

இந்திய கிரிக்கெட் அணி

Updated On :6 டிசம்பர் 2024, 5:43 pm IST

19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பையில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

19 வயதுக்குள்பட்டோருக்கான 11-வது ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன.

அதன்படி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி பாகிஸ்தான் அணியை வீழ்த்திய வங்கதேச அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

2-வது அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா - இலங்கை அணிகள் மோதிய போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தேவ்மிகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் - அவுட் ஆனது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69 ரன்கள் எடுத்தார். அதில், 2 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்திய அணித் தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் வைபவ் சூரியவன்ஷி 67 ரன்கள் விளாசினார். அதில், 5 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். அவரைத் தவிர்த்து ஆயுஷ் மத்ரே 34 ரன்களும், கேப்டன் அமான் 25 ரன்களும் எடுத்தனர்.

அரையிறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை(டிச.8) அன்று நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.