/

விஜய் ஹசாரே டிராபி: உ.பி. அணியை வழிநடத்தும் ரிங்கு சிங்!

விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

ரிங்கு சிங்

Updated On :20 டிசம்பர் 2024, 9:13 pm IST

விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார்.

டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப் பிரதேச அணியை ரிங்கு சிங் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் அணியை வழிநடத்திய அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம் இருந்து அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

புவனேஷ்வர் தலைமையிலான உத்தரப்பிரதேச அணி காலிறுதியில் தில்லிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.

உபி.டி20 போட்டியில் மீரட் மேவரிக்ஸ் அணியை வழிநடத்திய ரிங்கு சிங் 9 இன்னிங்ஸ்களில் 161.54 ஸ்ட்ரைக் ரேட்டில் 210 ரன்கள் எடுத்திருந்தார்.

ரிங்கு சிங் இந்தியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், முதல்தர போட்டிகளில் 52 இன்னிங்ஸ்களில் 1,899 ரன்களை குவித்துள்ளார். அதில் 1 சதம், 17 அரை சதங்களும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.