மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

படம் | கிரிக்கெட் அயர்லாந்து (எக்ஸ்)

Updated On :26 ஜூலை 2024, 4:13 pm IST

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மாஸ்வர் 74 ரன்களும், ஜே கம்பி 49 ரன்களும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி மற்றும் ஆண்டி மெக்பிரின் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்க் அடாய்ர் 2 விக்கெட்டுகளையும், கிரைக் யங் மற்றும் கர்டிஸ் காம்ஃபர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 26) அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.