அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு... முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!

முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டியுள்ளார்.

News image
முகமது ரிஸ்வான்- படம் | AP
Updated On :8 நவம்பர் 2024, 4:14 pm

DIN

முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

முகமது ரிஸ்வானுக்கு பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி

ஷகித் அஃப்ரிடி

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கேப்டன் அணிக்கு ஊக்கம் அளிக்கும்போது, அணி சிறப்பாக விளையாடுகிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி மிக வலுவாக திரும்பி வந்துள்ளது. இந்த வெற்றி அடுத்து வரவிருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணிக்கு உத்வேகம் அளிக்கும்.

முகமது ரிஸ்வான், ஹாரிஸ், ஷாகீன், சயீம் மற்றும் அப்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். உங்களை நம்புங்கள். உங்களுக்கு மேலும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன எனப் பதிவிட்டுள்ளார்.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 10) பெர்த்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.