புதன்கிழமை நடைபெற்ற 3ஆவது டி20யில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா 208 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் திலக் வர்மா சதம் அடித்து அசத்தினார். தெ.ஆ. சார்பில் மார்கோ யான்சென் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து போராடினார்.
இந்தப் போட்டி குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:
இலக்குக்கு அருகாமையில் சென்றதன் முயற்சிக்கு பெருமையாக இருக்கிறது. கடைநிலை பேட்டர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வருவதைப் பார்க்க நன்றாக இருந்தது.
இந்தமாதிரி ஆடுகளத்தில்தான் 220 ரன்களையும் சேஸிங் செய்யலாம். இதில் ஓவ்வொரு ஓவரும் முக்கியமானது. அடுத்த போட்டியில் சில பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மார்க்ரம் மீது கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி டி20 நவ.15ஆம் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா போராட்டம் வீண்: உலகக் கோப்பையில் 2-ஆவது தோல்வி!

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!







