புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முயற்சிக்கு பெருமையாக இருக்கிறது..! தோல்வி குறித்து தெ.ஆ. கேப்டன் பேட்டி!

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20யின் தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கூறியதாவது...

News image

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம்..

Themba Hadebe

Updated On :14 நவம்பர் 2024, 6:29 am

DIN

புதன்கிழமை நடைபெற்ற 3ஆவது டி20யில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா 208 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் திலக் வர்மா சதம் அடித்து அசத்தினார். தெ.ஆ. சார்பில் மார்கோ யான்சென் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து போராடினார்.

இந்தப் போட்டி குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:

இலக்குக்கு அருகாமையில் சென்றதன் முயற்சிக்கு பெருமையாக இருக்கிறது. கடைநிலை பேட்டர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வருவதைப் பார்க்க நன்றாக இருந்தது.

இந்தமாதிரி ஆடுகளத்தில்தான் 220 ரன்களையும் சேஸிங் செய்யலாம். இதில் ஓவ்வொரு ஓவரும் முக்கியமானது. அடுத்த போட்டியில் சில பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மார்க்ரம் மீது கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி டி20 நவ.15ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.