இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் பார்டர் - கவாஸ்கர் தொடர் வரும் நவ.22ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது.
2022ஆம் ஆண்டு ரூர்கியில் டிசம்பர் மாதம் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கினார் ரிஷப் பந்த்.
கடந்த முறை ஆஸி.க்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த சிறப்பாக செயல்பட்டார். கடந்த இரண்டு தொடர்களில் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த்தின் சராசரி 62. நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தாலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பந்த் குறித்து கூறியதாவது:
உண்மையாக சொல்ல வேண்டுமானால் ரிஷப் பந்த்தை விபத்துக்குப் பிறகு பார்த்திருந்தால் அவரிடம் சென்று நீங்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுங்கள் என நம்பிக்கையை கொடுத்திருக்க முடியாது.
நான் இதை மறக்க மாட்டேன். ரிஷப் மோசமாக இருந்தார். விபத்துக்குப் பிறகு ஒரு மாதம் சென்று கழித்து பார்த்தேன். உருக்குலைந்து, நொருங்கி, உடலின் பாகங்களில் காயங்களுடன் இருந்தார்.
எல்லா இடங்களிலும் தையல் போடப்பட்டுள்ளது. மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து சாதாரணமாக வந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது நம்பமுடியாத விஷயம்.
அங்கிருந்து டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் அணியில் பங்குபெறுவது மிகப்பெரிய சாதனை.
மருத்துவமனையில் நடக்கமுடியாமல் இருந்து தற்போது ஃபார்முடன் ஆஸி.க்கு திரும்பியுள்ளது ஆஸி. வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கிரிக்கெட் மீதான ஆர்வம் ரிஷப் பந்த்துக்கு இன்னமும் அதிகரித்துள்ளது. கடைசி சில மாதங்களாக கடினமாக உழைத்து டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளது எனக்கு தெரியும்.
ஸ்டார் ஸ்போர்டிஸில் ரிஷப் பந்த், “முதல்முறையாக என்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தேன். இந்த உலகத்துடனான என்னுடய காலம் முடிந்துவிட்டதென நினைத்தேன். கடவுள்தான் என்னை காப்பாற்றியிருக்க வேண்டும். மருத்துவர்கள்கூட இது வாழ்க்கையை மாற்றும் இந்த விபத்து குறித்து மருத்துவர்களும் மோசமாகவே கூறினார்கள். இது குணமடைய கிட்டதட்ட 16- 18 மாதங்கள் ஆகும் என்றார்கள். இந்தக் காலத்துக்கு 6 மாதங்கள் முன்னதாக நான் குணமடைவேன் என மருத்துவர்களிடம் கூறினேன்” என்றார். கூறியபடியே செய்தும் காட்டினார் ரிஷப் பந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

விளையாட்டு துளிகள்...

லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கேவுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும்: ரவி சாஸ்திரி
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



