இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
புதிய சாதனையை நோக்கி...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியைக் காண முதல் நாளில் 31,302 பேர் வருகை புரிந்துள்ளனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று (நவம்பர் 23) 32,368 பேர் வருகை புரிந்துள்ளனர்.
முதல் இரண்டு நாள்களையும் சேர்த்து இதுவரை 63,670 பேர் போட்டியைக் காண மைதானத்துக்கு நேரில் வந்துள்ளனர். போட்டி நிறைவடைய இன்னும் 3 நாள்கள் இருக்கும் நிலையில், அதிக பார்வையாளர்கள் நேரில் கண்டு களித்த டெஸ்ட் போட்டி என்ற சாதனையை நோக்கி பெர்த் டெஸ்ட் போட்டி நகர்ந்து வருகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 2006-2007 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது, வாக்கா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 1,03,440 பேர் மைதானத்துக்கு நேரில் வந்து கண்டுகளித்ததே இதுவரையில் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாக இருந்து வருகிறது.
இந்த சாதனையை முறியடிக்க பெர்த் டெஸ்ட்டின் மீதமுள்ள 3 நாள்களில் 39,771 ரசிகர்கள் போட்டியைக் காண மைதானத்துக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை: கிளன் மெக்ராத்

முல்லான்பூர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



