8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்..! 35ஆவது சதமடித்த ஜோ ரூட்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.

ஜோ ரூட் - Anjum Naveed

Published On :9 அக்டோபர் 2024, 3:07 pm IST

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது.

64 ஓவரில் இங்கிலாந்து அணி 323/3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹாரி புரூக் 53 ரன்களுடனும் ஜோ ரூட் 102 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

அலைஸ்டர் குக் சாதனை முறியடிப்பு

அலைஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் 12,472 ரன்கள் எடுத்து ஓய்வு பெற்றார். ஜோ ரூட் இந்தப் போட்டியில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குக்கின் சாதனையை (12,473) முறியடித்தார்.

அத்துடன் தனது 35ஆவது சதத்தையும் ஜோ ரூட் நிறைவு செய்துள்ளார்.

இந்தாண்டில் அதிக சதங்கள் (5) அடித்தவர்கள் பட்டியலில் கமிந்து மெண்டிஸுடன் சமன்செய்துள்ளார் ஜோ ரூட்.

டெஸ்ட்டில் அதிக சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - 51

ஜாக் காலிஸ் - 45

ரிக்கி பாண்டிங் - 41

குமார் சங்ககாரா - 38

ராகுல் திராவிட் - 36

ஜோ ரூட் - 35

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.