திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கியுள்ளது.

News image

சதமடித்த சர்ஃபராஸ் கான், மழையினால் போட்டி பாதிப்பு.

Updated On :19 அக்டோபர் 2024, 12:29 pm IST

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.16 அன்று பெங்களூரில் தொடங்கியது. முதல்நாள் மழையினால் பாதிக்க 2ஆம் நாளில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. நியூசி. சார்பில் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.

3ஆம் நாள் இந்திய அணி 231/3 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 4ஆவது நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி உணவு இடைவேளை வரை 344/3 ரன்கள் எடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தாலும் 2ஆவது இன்னிங்ஸில் வலுவாக விளையாடி வருகிறது. எளிதாக தோற்க வேண்டிய போட்டியினை டிராவை நோக்கி நகர்த்துகிறது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.