துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் விளையாடுகின்றன. ஏ அணிக்கு ஷுப்மன் கில், பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டி அணிக்கு ஸ்ரேயாஷ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகிறார்கள்.
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் சி, டி அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் டி அணி 164 ரன்களும் 2ஆவது இன்னிங்ஸில் 236 ரன்களும் எடுத்தன. சி அணி முதல் இன்னிங்ஸில் 168 ரன்கள் எடுத்தது.
முதல் வெற்றி
அடுத்து 2ஆவது இன்னிங்ஸில் கேப்டன் ருதுராஜ் 46, ஆர்யன் ஜுயல் 47, ரஜத் படிதார் 44 ரன்களும் எடுத்தார்கள். அபிஷேக் போரேல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்.
61 ஓவர் முடிவில் 233 ரன்கள் எடுத்து இந்திய சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் முதல் வெற்றியை ருதுராஜின் அணி பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யு-18 ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியா வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அக். 11-இல் தொடக்கம்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




