துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியா பி அணியில் முஷீர்கான் விளையாடுகிறார். இவர் சர்ஃபராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 94/7 விக்கெட் இழந்த நிலையில் தனது அபாரமான பேட்டிங்கினால் 181 ரன்கள் அடித்து 321 ரன்களுக்கு வித்திட்டார்.
இந்திய பி அணி 143 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. சர்பராஸ், ரிஷப் பந்த் விளையாடி வருகிறார்கள்.
தம்பியின் சதத்தை கொண்டாடிய சர்ஃபராஸ் கான்
முதல் இன்னிங்ஸில் முஷீர் கான் சதம் அடித்தபோது அவரைவிடவும் சர்ஃபராஸ் கான் மிகுந்த ஆர்வமாக அந்தச் சதத்தைக் கொண்டாடினார்.
இந்த விடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றன.
உள்ளூர் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் அசத்தலாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் அவரது சகோதரரும் சிறப்பாக விளையாடுவது கூடுதல் பலமாக பார்க்கிறார்.
Musheer Khan brings up his ð¯ ð
— Hypocrisy (@aatrva15422) September 7, 2024
A special celebration and a special appreciation from brother Sarfaraz Khan ð#DuleepTrophy | pic.twitter.com/wbeDVIQQ2B
இந்தியாவுக்கு ஏற்ற வீரராக முஷீர்கான் இருப்பார்
முஷீர்கான் குறித்து முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பட் விஜய் தாஹியா கூறியதாவது:
மற்ற வீரர்களை விடவும் முஷீர்கான் வித்தியாசமானவர். அவருக்கு திடமான மனநிலை இருக்கிறது. என்னால் வருங்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், அவர் இதேமாதிரி தொடர்சியாக ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு சிறந்த வீரராக இருப்பார்.
கடந்த சீசனில் பேட்டிங்கை எங்குவிட்டாரோ அங்கிருந்தே தொடங்கியுள்ளார். ரஞ்சி கோப்பையின் அரையிறுதி, இறுதிப் போட்டியிலும் அசத்தலாக விளையாடிய முஷீர்கான் துலீப் கோப்பையின் முதல் போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.
முஷீர் தொடக்கத்தில் இடது கை சுழல்பந்து வீச்சாளராகவே தொடங்கினார். அவரது பேட்டிங் மாற்றம் அசாத்தியமானது. ஒன்றுக்காக கடினமாக உழைத்தால் அது நிச்சயமாக உங்களைச் சேரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் போராட்டம் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது! சிஜேபிக்கு சல்மான் கான் ஆதரவு!

அதிர்ச்சி தோற்றம்! நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆனது?
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

அமீர் கான் மகனைத் தடுத்து நிறுத்திய சல்மான் கான் பாதுகாவலர்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager





