தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?

மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா என்பது குறித்து...

News image

சூர்யகுமார் யாதவ் - படம் | ஐசிசி

Updated On :3 ஏப்ரல் 2025, 12:50 pm

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை மும்பை கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.

ரஞ்சி கோப்பையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்குமார் யாதவ் இடம்பெற்று விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு

மும்பை அணியில் உள்ள வீரர்கள் சிலருடன் இணைந்து கோவா அணிக்கு சூர்யகுமார் யாதவ் செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மும்பை அணியை விட்டு சூர்யகுமார் யாதவ் எங்கும் செல்லவில்லை எனவும், மும்பை அணிக்காக விளையாடுவதையே அவர் விரும்புகிறார் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க செயலர் அபய் ஹதாப் கூறியதாவது: மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சூர்யகுமார் யாதவிடம் பேசினார்கள். அவரிடம் பேசிய பிறகு, சமூக வலைதளங்களில் பரவியது வதந்தி என்பதும், முழுவதும் ஆதாராமற்ற செய்தி என்பதையும் உறுதிப்படுத்தினோம். மும்பை அணிக்காக விளையாடுவதில் சூர்யகுமார் யாதவ் மிகுந்த பெருமைப்படுகிறார். அதனால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.