இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை மும்பை கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்குமார் யாதவ் இடம்பெற்று விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?
மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
மும்பை அணியில் உள்ள வீரர்கள் சிலருடன் இணைந்து கோவா அணிக்கு சூர்யகுமார் யாதவ் செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மும்பை அணியை விட்டு சூர்யகுமார் யாதவ் எங்கும் செல்லவில்லை எனவும், மும்பை அணிக்காக விளையாடுவதையே அவர் விரும்புகிறார் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க செயலர் அபய் ஹதாப் கூறியதாவது: மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சூர்யகுமார் யாதவிடம் பேசினார்கள். அவரிடம் பேசிய பிறகு, சமூக வலைதளங்களில் பரவியது வதந்தி என்பதும், முழுவதும் ஆதாராமற்ற செய்தி என்பதையும் உறுதிப்படுத்தினோம். மும்பை அணிக்காக விளையாடுவதில் சூர்யகுமார் யாதவ் மிகுந்த பெருமைப்படுகிறார். அதனால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதையும் படிக்க: கோப்பையை வெல்வது மட்டும் மீதமிருக்கிறது: நிதீஷ் குமார் ரெட்டி
முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் ஓய்வு பெறும் வரை இந்த பேச்சுகள் ஓயப் போவதில்லை: ரோஹித் சர்மா

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!

இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டன் சூர்யகுமார் புதிய அணிக்கு வாழ்த்து!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



