கோப்பையை வெல்வது மட்டுமே மீதமிருப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டி கூறியதென்ன?
கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்ட நிலையில், இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வெல்வது மட்டுமே முடிவடையாத வேலையாக இருப்பதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், தனிப்பட்ட எந்த ஒரு இலக்குகளையும் நான் ஒருபோதும் நிர்ணயித்துக்கொண்டது கிடையாது. கடந்த சீசனிலும் சரி, இந்திய அணிக்காக விளையாடிபோதிலும் சரி எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட இலக்குகளும் இல்லை. சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்வது மட்டுமே முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது. நாங்கள் ஒரு அணியாக பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளோம். ஆனால், எங்களது இலக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதே.
எனது நாட்டுக்காகவும், ஐபிஎல் தொடரிலும் நான் அடைந்துள்ள முன்னேற்றத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடர்ச்சியாக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய ஆட்டத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ள தொடங்கிவிட்டார்கள். எனது விளையாட்டை பாராட்டவும் செய்கிறார்கள். அதனால், அதிகம் யோசிக்காமல் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை நேசித்து விளையாட விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேற்றம்: மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



