
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக வான் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்களை எடுத்தனர்.
இந்திய ஸ்பின்னர்கள் அசத்தலாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அபாரமாக பந்துவீசிய கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
83 ரன்களை இலக்காக களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய கொங்கடி த்ரிஷா பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சானிகா சால்கேவும் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நடப்பு சாம்பியனான இந்தியா தொடர்ந்து 2அவது முறையாக யு19 டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.