சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

விராட் கோலி - படம் | AP

Updated On :8 பிப்ரவரி 2025, 1:32 pm

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று விளையாடினார்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். பிளேயிங் லெவனில் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை என்னால் கூற முடியாது. பிளேயிங் லெவனை கேப்டனும், தலைமைப் பயிற்சியாளரும்தான் தேர்வு செய்ய வேண்டும். அதனால், பிளேயிங் லெவன் குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்கினார். அவர் அறிமுகப் போட்டியில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலிக்குப் பதிலாக முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.

Story image

இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் போகலாம்.

இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.