விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ஒருநாள் போட்டிகளில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 6 போட்டிகளில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி தனது ரன் கணக்கைத் துவங்குவதற்கு சிரமப்பட்டார். நேற்றையப் போட்டியில் அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்?
விராட் கோலி தனக்குத் தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் எனவும், அவர் மனதளவில் கவலையின்றி இருக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிகவும் கஷ்டப்பட்டு ரன்கள் எடுக்க முயற்சிப்பதாக நினைக்கிறேன். அவர் விளையாடிய இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் ரன்கள் எடுக்க சிரமப்படுவது தெரியும். ஆனால், அவர் ரன்கள் எடுப்பது குறித்து கவலையடையக் கூடாது. ரோஹித் சர்மா களமிறங்கி கவலையின்றி சுதந்திரமாக விளையாடுகிறார். ஏனெனில், அணியில் பேட்டிங் செய்வதற்கு பின்னால் ஃபார்மில் உள்ள நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ரோஹித் சர்மாவைப் போன்று விராட் கோலியும் விளையாட வேண்டும்.
இதையும் படிக்க: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!
அனைத்து வீரர்களும் அவர்களது பயணத்தில் கடினமான காலக் கட்டத்தை கடந்து வருவார்கள். ஆனால், விராட் கோலி விளையாடுவதைப் பார்க்கும்போது, அவருக்கு அவரே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதாக நினைக்கிறேன். அந்த மாதிரியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, வீரர்கள் ரிலாக்ஸாக விளையாடுவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டன் சூர்யகுமார் புதிய அணிக்கு வாழ்த்து!

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



