நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கேட்ச்சை தவறவிட்டு இப்படியா சமாளிப்பது? ரோஹித் சர்மாவின் ஜாலியான பதில்!

அக்‌ஷர் படேல் ஓவரில் தவறவிட்ட கேட்ச்சுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image

அக்‌ஷர் படேலுடன் ரோஹித் சர்மா - படம்: ஏபி

Updated On :21 பிப்ரவரி 2025, 12:06 pm IST

அக்‌ஷர் படேல் ஓவரில் தவறவிட்ட கேட்ச்சுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் மோதின. இந்தப் போட்டியில் 8.2, 8.3ஆவது பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. 8.4ஆவது பந்தில் ஜேக்கர் அலியின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் சென்றது.

ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா அதைப் பிடிக்க தவறிவிட்டார்.

இந்தக் கேட்ச்சை பிடித்திருந்தால் அக்‌ஷர் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்திருக்கும்.

கேட்ச் தவறவிட்ட விரக்தியில் ரோஹித் சர்மா மைதானத்தில் கையை வைத்து பலமுறை ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:

நான் அக்‌ஷர் படேலை இரவு உணவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் (புன்னகைக்கிறார்). எளிமையான கேட்ச்சை தவறவிட்டேன். எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட தரத்துக்கு அந்தக் கேட்சை கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். ஆனால், இந்தமாதிரி நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன என்றார்.

இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் திரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.