

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.
அயர்லாந்து - 137/8
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லோர்கான் டக்கர் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாரி டெக்டார் 28 ரன்களும், கர்டிஸ் கேம்ஃபர் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் டிரெவர் குவாண்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரிச்சர்டு நிகராவா மற்றும் சிக்கந்தர் ராஸா தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிளெஸிங் முஸர்பானி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்பே அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.