குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

“கோஹினூர் வைரம்...” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

News image

விராட் கோலி - படம் | AP

Updated On :24 பிப்ரவரி 2025, 6:49 pm IST

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

கோஹினூர் வைரம்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் விளாசிய நிலையில், விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசியுள்ளார். அவரது இந்த சதத்தைப் பார்த்த பிறகு, அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்பதை என்னால் கூற முடியும். அவரால் இன்னும் 10 அல்லது 15 சதங்கள் விளாச முடியும். கடினமான சூழல்களில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். தனது கடினமான சூழலை திறம்பட கையாண்டு விராட் கோலி சதம் விளாசியிருக்கிறார். விராட் கோலி தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வீரர். அவர் கோஹினூர் வைரம் போன்றவர் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.