தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

“கோஹினூர் வைரம்...” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

News image

விராட் கோலி - படம் | AP

Updated On :24 பிப்ரவரி 2025, 1:19 pm

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

கோஹினூர் வைரம்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் விளாசிய நிலையில், விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசியுள்ளார். அவரது இந்த சதத்தைப் பார்த்த பிறகு, அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்பதை என்னால் கூற முடியும். அவரால் இன்னும் 10 அல்லது 15 சதங்கள் விளாச முடியும். கடினமான சூழல்களில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். தனது கடினமான சூழலை திறம்பட கையாண்டு விராட் கோலி சதம் விளாசியிருக்கிறார். விராட் கோலி தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வீரர். அவர் கோஹினூர் வைரம் போன்றவர் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.