விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
இதையும் படிக்க: கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்... விராட் கோலி கூறியதென்ன?
கோஹினூர் வைரம்
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் விளாசிய நிலையில், விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசியுள்ளார். அவரது இந்த சதத்தைப் பார்த்த பிறகு, அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்பதை என்னால் கூற முடியும். அவரால் இன்னும் 10 அல்லது 15 சதங்கள் விளாச முடியும். கடினமான சூழல்களில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். தனது கடினமான சூழலை திறம்பட கையாண்டு விராட் கோலி சதம் விளாசியிருக்கிறார். விராட் கோலி தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வீரர். அவர் கோஹினூர் வைரம் போன்றவர் என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!

இந்திய அணியில் ரோஹித், கோலி தொடர்ந்து விளையாடுவார்களா? கபில் தேவ் கொடுத்த அருமையான பதில்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



