காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

“கோஹினூர் வைரம்...” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

News image

விராட் கோலி - படம் | AP

Updated On :24 பிப்ரவரி 2025, 6:49 pm IST

விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

கோஹினூர் வைரம்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் விளாசிய நிலையில், விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசியுள்ளார். அவரது இந்த சதத்தைப் பார்த்த பிறகு, அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்பதை என்னால் கூற முடியும். அவரால் இன்னும் 10 அல்லது 15 சதங்கள் விளாச முடியும். கடினமான சூழல்களில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். தனது கடினமான சூழலை திறம்பட கையாண்டு விராட் கோலி சதம் விளாசியிருக்கிறார். விராட் கோலி தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வீரர். அவர் கோஹினூர் வைரம் போன்றவர் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.