தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை; கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பேட்டி!

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை என கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார்.

News image

இந்திய அணி வீரர்கள் - படம் | AP

Updated On :2 ஜனவரி 2025, 6:28 pm IST

இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பும் குறைந்தது.

இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. மெல்போர்ன் போட்டியில் ஏற்பட்டத் தோல்விக்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடப் போவதில்லை எனவும் கூறப்படுகிறது.

எந்தவொரு பிளவும் இல்லை

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய அணிக்குள் எந்தவொரு பிளவும் இல்லை என கௌதம் கம்பீரின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா (கோப்புப் படம்)

கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா (கோப்புப் படம்) - படம் | பிசிசிஐ (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணி தோல்வியை சந்திக்கும்போது, அந்த அணி தொடர்பான விமர்சனங்கள் எழுவது வழக்கம். இந்திய அணி மீதான விமர்சனங்களும் அவ்வாறானவையே. இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைத்து வெற்றி பெற வேண்டும் என்பது கௌதம் கம்பீருக்குத் தெரியும். அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரியும். இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் அவரது ஆட்டத்தின் மீது அவரே அதிருப்தியில் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.