மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பும்ராவை எதிர்கொள்வது கடினம்: ஆஸி. அறிமுக வீரர்!

சிட்னியின் வேகமான ஆடுகளத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்வது கடினம் என்று ஆஸ்திரேலிய அறிமுக வீரர் தெரிவித்துள்ளார்.

News image
ஜஸ்பிரித் பும்ரா | வெப்ஸ்டெர்
Updated On :3 ஜனவரி 2025, 12:01 pm

DIN

சிட்னியின் வேகமான ஆடுகளத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்வது கடினம் என்று ஆஸ்திரேலிய அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டெர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 40 ரன்கள் விளாசினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். அதனுடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டெர் கூறுகையில், “இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் வகையில் இருக்கிறது. ஆனால், ஜஸ்பிரித் பும்ரா மாதிரியான உலகத் தரம் வாய்ந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அவரது லைன் மற்றும் லென்த் இரண்டுமே தனித்துவமானவை. இதனால், இந்த ஆடுகளம் அவருக்கு சாதகமானதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட வேகமான ஆடுகளத்தில் இந்திய அணியை 200 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆக்கியது மிகவும் பாராட்டுக்குரியது.

ஆடுகளத்தில் அதிகளவிலான புல் இருக்கிறது. இது சாதாரண ஆடுகளம் அல்ல. ஸ்காட் போலண்ட் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஏன் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதற்கு சிறந்த உதாரணம். சில பந்துகள் விளையாட முடியாததாக இருந்தாலும், விக்கெட் எடுப்பது கடினமாக இருந்தது.

ரிஷப் பந்த மற்றும் ஜடேஜா இடையே நல்ல பாட்னர்-ஷிப் அமைந்தது. ஸ்லிப்பில் இருந்து விராட் கோலியின் கேட்சைப் பிடித்தது சுவாரசியமாக இருந்தது. மேலும் ஸ்லிப்பில் இருந்து வீரர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கும் அருமையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவது ஒரு பெருமையான தருணம். ஒரு மிகச் சிறிய இடத்தில் இருந்து வந்த எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.