பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல், இந்திய அணி 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்.

ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP

Published On :

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச சிரமப்பட்டார். பின்னர், அவர் பெவிலியன் திரும்பினார். மீண்டும் பந்துவீச வரவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணி தடுமாறும்

இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், மூன்றாம் நாளில் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றாலும் அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லையெனில் வெற்றி பெறுவது கடினம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 40 ரன்கள் குவித்தால் அணிக்கு 185 ரன்கள் கிடைக்கும். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்கும். ஆனால், இந்திய அணி வெற்றி பெறுவது பும்ரா எந்த அளவுக்கு முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை பொறுத்தே அமையும்.

ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், 145 அல்லது 150 ரன்களே போதுமானதாக இருக்கும். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாத பட்சத்தில், 200 ரன்கள் குவித்தாலும் வெற்றி பெறுவதற்கு அந்த ரன்கள் போதுமானதாக இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.