அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கவுன்டி போட்டிகளில் விளையாட விரும்பும் விராட் கோலி?

இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் விராட் கோலி விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
விராட் கோலி
Updated On :9 ஜனவரி 2025, 2:18 pm

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளான கவுன்டி போட்டிகளில் விராட் கோலி விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடினார். இதனால், அனைவரின் மத்தியிலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

முதல் டெஸ்டில் சதம் அடித்த போதிலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் 9 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து அவுட் ஆகி நிறைய விமர்சனங்களையும் சந்தித்தார்.

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து நிறைய கருத்துகள் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, சூழ்நிலைகளுக்குத் தயாராகும் வகையில் கோலி கவுன்டி போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறும் போது அங்கு கவுன்டி போட்டிகள் நடைபெறுவதால் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி ஃபார்ம் குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறுகையில், “சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது கோலிக்கு ஒரு மோசமானதாக அமைந்தது.

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் சதமடித்த போதிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 23.75 சராசரியுடன் 190 ரன்கள் மட்டுமே குவித்தார். விராட் கோலிக்கு ஓய்வு என்பது மிகவும் தனிப்பட்ட தேர்வு” என்றார்.

விராட் கோலி சில கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு ஐபிஎல் 2025 பிளேஆஃப்க்குச் செல்லவில்லை என்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஆர்சிபி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு மிகக் குறைவான நேரமே இருக்கும். ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதியும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதியும் தொடங்குகிறது.

ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு 14 நாள்கள் மட்டுமே இருந்து, இங்கிலாந்து சூழ்நிலையில் விளையாடப் பழகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆர்சிபியின் கேப்டனாக கோலி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.