திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

இங்கிலாந்து தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
ரிஷப் பந்த்| கேஎல்.ராகுல் | சஞ்சு சாம்சன்
Updated On :10 ஜனவரி 2025, 10:31 am

DIN

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் இரு தொடருக்கான அணிகள் அறிவிக்கப்படவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்துக்கு தொடரில் இருந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் ராகுலுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.மேலும், விக்கெட் கீப்பருக்கான போட்டியில் டெஸ்ட் கீப்பர் ரிஷப் பந்த், டி20 கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர்.

எவ்வாறாயினும், யார் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ராகுல் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ராகுல். இந்தத் தொடருக்கான காலிறுதிப் போட்டிகள் இந்த வாரத்தில் நடைபெறவிருக்கின்றன.

ஆஸ்திரேலிய தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி தொடரில் கேஎல். ராகுல் விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.