அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

இங்கிலாந்து தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

ரிஷப் பந்த்| கேஎல்.ராகுல் | சஞ்சு சாம்சன்

Updated On :10 ஜனவரி 2025, 10:31 am

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் இரு தொடருக்கான அணிகள் அறிவிக்கப்படவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்துக்கு தொடரில் இருந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் ராகுலுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.மேலும், விக்கெட் கீப்பருக்கான போட்டியில் டெஸ்ட் கீப்பர் ரிஷப் பந்த், டி20 கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர்.

எவ்வாறாயினும், யார் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ராகுல் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ராகுல். இந்தத் தொடருக்கான காலிறுதிப் போட்டிகள் இந்த வாரத்தில் நடைபெறவிருக்கின்றன.

ஆஸ்திரேலிய தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி தொடரில் கேஎல். ராகுல் விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.