அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.

News image

மும்பை வான்கடே மைதானம் (கோப்புப் படம்)

Updated On :10 ஜனவரி 2025, 11:02 am

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.

மும்பை வான்கடே மைதானம் கடந்த 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் விழா நடத்தப்பட உள்ளது.

வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கொண்டாட்ட விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, அஜிங்கியா ரஹானே, திலீப் வெங்க்சர்க்கார், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜிங்க்யா நாயக் பேசியதாவது: மும்பை வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கிறேன். இந்த கொண்டாட்டத்தின்போது, நமது லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்றார்.

மும்பை வான்கடே மைதானம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் போட்டியாக இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.