திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.

News image
மும்பை வான்கடே மைதானம் (கோப்புப் படம்)
Updated On :10 ஜனவரி 2025, 11:02 am

DIN

வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.

மும்பை வான்கடே மைதானம் கடந்த 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் விழா நடத்தப்பட உள்ளது.

வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கொண்டாட்ட விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, அஜிங்கியா ரஹானே, திலீப் வெங்க்சர்க்கார், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜிங்க்யா நாயக் பேசியதாவது: மும்பை வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கிறேன். இந்த கொண்டாட்டத்தின்போது, நமது லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்றார்.

மும்பை வான்கடே மைதானம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் போட்டியாக இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.