வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து, அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா?
மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், சரியாக விளையாடவில்லையென்றால் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
இது தொடர்பாக பிரபலங்களுக்கான சிசிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட யுவராஜ் சிங் பேசியதாவது: உள்ளூர் போட்டிகள் மிகவும் முக்கியம். வீரர் ஒருவருக்கு நேரம் இருக்கிறது, அவர் போட்டிகளில் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கத் தவறுகிறார் என்றால், கண்டிப்பாக அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கும் என்றார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பை அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாகவோ அல்லது எந்தவொரு பயிற்சி மேற்கொள்வது தொடர்பாகவோ விராட் கோலி தரப்பிலிருந்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் எனப் பலரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.133 கோடி மதிப்பிலான 657 பழங்கால கலைப் பொருள்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்! யுவராஜ் சிங்
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


