தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க குல்தீப் யாதவ் தீவிர பயிற்சி!

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

News image

குல்தீப் யாதவ் - படம் | பிசிசிஐ

Updated On :16 ஜனவரி 2025, 4:36 pm IST

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவுக்கு, கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.

மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, அந்த அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்காக குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

குல்தீப் யாதவின் உடல்தகுதி பரிசோதிக்கப்பட்டு, அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

குல்தீப் யாதவ் முழு உடல்தகுதியை நிரூபிக்க தவறும் பட்சத்தில், அணியில் ரவி பிஷ்னோய் அல்லது வருண் சக்கரவர்த்தி இவர்கள் இருவரில் ஒருவர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.