மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.

News image

வருண் சக்கரவர்த்தி - படம் | பிசிசிஐ

Updated On :23 ஜனவரி 2025, 7:02 pm IST

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்

அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா - படம் | பிடிஐ

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில டி20 தொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக இருந்துள்ளார். டி20 போட்டிகளில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பது வழக்கம். அந்த மாதிரியான சூழலில் அணியில் முக்கியமான பந்துவீச்சாளரை நம்பியிருப்பது மிகவும் முக்கியம். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக சிறப்பாக விளையாட எதிரணியினர் சிரமப்படுகின்றனர். அவர் மட்டுமல்லாது, ரவி பிஷ்னோய் மற்றும் அக்‌ஷர் படேலும் சிறப்பாக பந்துவீசினர்.

ஒரு பேட்ஸ்மேனாக 4 - 5 இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரது மனநிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், உங்களால் அணிக்காக போட்டியை வென்று கொடுக்க முடியும் என எனக்கு கௌதம் கம்பீரும், சூர்யகுமார் யாதவும் ஆதரவளித்தனர் என்றார்.

நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரின் விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.