சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

2-வது டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள்; மே.இ.தீவுகள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image

படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :25 ஜனவரி 2025, 10:00 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

163 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதன் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டனர்.

ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய குடகேஷ் மோட்டி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 87 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோமெல் வாரிக்கேன் 36 ரன்களும், கீமர் ரோச் 25 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சாஜித் கான் 2 விக்கெட்டுகளையும், காசிஃப் அலி மற்றும் அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

154 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சௌத் ஷகீல் 32 ரன்களும், கம்ரான் குலாம் மற்றும் சாஜித் கான் தலா 16 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கேன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், கீமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.