திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அந்த கடைசி 5 ஓவர்கள் இருக்கே... ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு மிட்செல் மார்ஷ் புகழாரம்!

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்புகழாரம் சூட்டியுள்ளார்.

News image

படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :21 ஜூலை 2025, 9:41 pm IST

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே முழுமையாக வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் குறிப்பாக, கடைசி 16 பந்துகளில் 7 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

மிட்செல் மார்ஷ் புகழாரம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உண்மையில் மிகவும் சிறப்பாக இந்த டி20 தொடரை தொடங்கியுள்ளோம். மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், கடைசி 5 ஓவர்களை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அபாரமாக வீசினர். பந்துவீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக செயல்பட்டு தங்களது திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தினர்.

அதிக டி20 கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை அவர்கள் வெளிக்காட்டினர். இதுபோன்ற பந்துவீச்சு எப்போதும் உற்சாகத்தை தருவதாக இருக்கும். நாங்கள் தொடர்ச்சியாக இதேபோன்று செயல்படுவோம் என நம்புகிறேன். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Summary

Australian captain Mitchell Marsh has praised the bowlers for their excellent bowling performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.