டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிரேக்கிங் பேட்: கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் உடைந்த ஜெஸ்வாலின் பேட்!

இந்திய வீரர் ஜெஸ்வாலின் பேட் உடைந்தது குறித்து...

News image

கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் உடைந்த ஜெஸ்வாலின் பேட்... - படங்கள்: ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா, ஹாட்ஸ்டார்.

Updated On :23 ஜூலை 2025, 6:35 pm IST

மான்செஸ்டர் டெஸ்ட்டில் விளையாடும்போது இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலின் பேட் உடைந்த விடியோ வைரலாகி வருகிறது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழக்காமல் 78 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் டிபெண்ட் செய்து ஆடும்போது பேட்டின் ஹாண்டில் பகுதி உடைந்தது.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் இதனை பிரேக்கிங் பேட் (Breaking Bat) என வர்ணித்துள்ளது.

இணையத் தொடர்களில் பிரேக்கிங் பேட் (Breaking Bad) மிகவும் பிரபலமானது. இதை ஒப்பிட்டு பகிர்ந்த புகைப்படம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 40 ரன்கள், ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.

Summary

A video of Indian batsman Yashasvi Jaiswal's bat breaking while playing in the Manchester Test is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.