திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது: முன்னாள் கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

News image

ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Updated On :9 ஜூன் 2025, 9:41 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வை அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை இளம் வீரர் ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். ரிஷப் பந்த் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் காத்திருக்கிறது

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்த நிலையில், இளம் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது எப்போதும் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. இந்த முறை இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை இளம் வீரரான ஷுப்மன் கில் வழிநடத்தவுள்ளார். இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படவுள்ளார்கள் என்பதைக் காண அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக இளம் இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண இந்த உலகம் காத்திருக்கிறது என்றார்.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் அரிதாக வென்றுள்ளது என்பதையே வரலாறு கூறுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் மூன்று முறை மட்டுமே டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 1971, 1986 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.