உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.
வெற்றி பெறுவது முக்கியம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், வலுவான ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த வாரத்தை மகிழ்ச்சியான வாரமாக மாற்றுவது மிகவும் முக்கியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனை நினைத்து நாங்கள் உண்மையில் மிகுந்த பெருமையடைகிறோம். சிறந்த ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் பயணத்தில் நாங்கள் இருப்பது என்னுடைய கண்களுக்குத் தெரிகிறது.
நாங்கள் இன்னும் அதனை சாதிக்கவில்லை. ஆனால், எங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அதற்கான படிக்கட்டாகப் பார்க்கிறோம். அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்றார்.
37 வயதாகும் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: 21 ஆண்டுகளுக்குப் பின் இறுதிச்சுற்றில் இந்தியா!

ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! ஐசிசி அறிவிப்பு!

உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி சின்னம் அறிமுகம்

இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்; எச்சரிக்கும் ஆஸி. வீராங்கனை!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



